திருக்குறள்

141.

பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத் தறம்பொருள் கண்டார்க ணில்.

திருக்குறள் 141

பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத் தறம்பொருள் கண்டார்க ணில்.

பொருள்:

பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அறநூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இல்லை.

மு.வரததாசனார் உரை:

பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

இவ்வுலகில் அறத்தையும், பொருளையும் கற்று அறிந்தவரிடம் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இல்லை.